மூலிகைகள்
உள்ளுறுப்புகளை சீராக இயங்க வைக்கும் சீரகம்
![சீரகம்](https://www.siddhamaruthuvam.in/wp-content/uploads/2017/11/சீரகம்.jpg)
சீரகம் நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய உணவு பொருளாகும். கார உணவுகளுக்கும் அசைவ உணவுகளுக்கும் கண்டிப்பாக சீரகத்தை பயன்படுத்துவார்கள் அது சீரணசக்திக்கும் நச்சு பொருட்கள் வெளியேறவும் பயன்படுகிறது.
வாந்தி யருசி குன்மம் வாய்நோய் பிலீகமிரைப்
பேந்திருமல் கல்லடைப்பி லாஞ்சனமூட் – சேர்ந்தகம்ம
லாசனகு டாரியெனு மந்தக் கிரகணியும்
போஐனகு டாரியுண்ணப் போம்
குணம்
சீரகத்தினால் வாந்தி, அரோசகம், வயிற்று வலி, முக ரோகம், காசம், வாதாதிக்கம், பீநசம், பித்தம் இவைகள் விலகும்.
பயன்கள்
- சீரகத்தினால் உடல் உறுதி பெறும், கண்களுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.
- ஒரு கிராம் அளவு சீரகத்தை பொடி செய்து தேன் அல்லது பாலில் கலந்து தினம் 2 வேளை சாப்பிட்டு வர பித்தம், வாயு, உதிர்ச்சிக்கல் ஆகியவை குணமாகும்.
- சீரகத்தை நன்கு அலசி காயவைத்து எலுமிச்சம் பழச்சாறு, இஞ்சிச்சாறு, நெல்லிக்காய் சாறு இவைகள் ஒவ்வொன்றிலும் 4 அல்லது 5 தடவை ஊறவைத்து உலர்த்தி பொடி செய்து சாப்பிட பித்தம், அசீரணம், அரோசகம் மயக்கம், கண்ணெரிச்சல், வயிற்று வலி, மூலக்கொதிப்பு, சீதபேதி ஆகிய நோய்கள் குணமாகும்.
- சீரகத்தை வறுத்து பொடி செய்து அதனுடன் பனங்கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
- உடல் உள் உறுப்புகளை சீராக இயங்க வைத்து, உடலுக்கு வலிமையை தருகிறது.